தற்கொலைத் தாக்குதல் என படையினர் பொய்ப் பிரச்சாரம்: படையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே மக்கள் பலி

விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலிலேயே நேற்று சுந்தரபுரம் பகுதியில் பொதுமக்களும் படையினரும் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில், இடம்பெயர்ந்து வந்த மக்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே அவர்கள் கொல்லப்பட்டதாக தெரியவருகின்றது.
மக்கள் கொல்லப்பட்ட இடத்தை படம்பிடித்துக் காட்டியிருந்த சிறீலங்கா இராணுவத் தரப்பு அங்கு படையினருக்கு சேதங்கள் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை.

அத்துடன் குண்டு வெடித்து காயம்பட்டதற்கான அடையாளங்கள் இல்லாமல் துப்பாக்கி வேட்டுக்களிலேயே மக்கள் கொல்லப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே திட்டமிட்ட ரீதியில் சர்வேதச ஒத்துழைப்புடன் இனப்படுகொலையை கொடூரமாகப் புரிந்துவரும் சிறீலங்கா அரசின் இன்னொரு படுகொலை வடிவம் இதுவென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் மக்களின் படுகொலை குறித்து வாய் மூடி மௌனம் காக்கும் அமெரிக்க (தூதர்) தொடக்கம், மனித உரிமைகள் அமைப்புகள் வரைக்கும் உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து ஆராயாமல் பிரச்சாரங்களை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தற்கொலைத் தாக்குதல் என படையினர் பொய்ப் பிரச்சாரம்: படையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே மக்கள் பலிSocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்