சுட்டுக்கொல்லப்படும் எம்மக்கள் - Channel 4 செய்திகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வீடியோ ஆதாரங்களுடன் வெளியானது
சிங்களச் சிப்பாய்களால் தமிழ் மக்கள் சுட்டுக்கொல்லப்படுவதை ஒளிப்படமாக இன்று இங்கிலாந்தில் இருந்து இயங்கும் Channel 4 தொலைக்காட்சி ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்படும் எம்மக்கள் - Channel 4 செய்திகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வீடியோ ஆதாரங்களுடன் வெளியானது
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: ஈழம், ஒளிக்காட்சிகள், செய்திகள்
தொடர்புடைய இடுக்கைகள்:பிரித்தானியாவின் Channel - 4 சேவையில் வவுனியா முகாம்கள் தொடர்பான செய்திகள்
பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவையில் இன்று இடம்பெற்ற செய்திக் கண்ணோட்டத்தில் வவுனியாவின் முகாம்கள் தொடர்பாகவும் அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்த செய்திகளையும் தொகுத்து வழங்கியிருந்தனர்.
வவுனியாவின் வடக்குப்பகுதியிலுள்ள இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து பிரித்தானிய Channel - 4 தொலைக் காட்சிச் சேவைக்குக் கிடைத்த செய்திகள் பிரகாரம் இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாவதக தெரியவருகிறது.அரசு சாரா ஊடகவியளார்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படாத நிலையில், ஒளிப்படக் கருவியை மறைத்துவைத்து முகாமிற்குள் நுளைந்த Channel - 4 செய்தியாளர் ஒருவர் முதல் தடவையாக சுதந்திரமாக சில செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார்.இச்செய்தி ஒளிப்பதிவானது முதல் தடவையாக சுதந்திரமாகப் பதிவுசெய்யப்பட்ட செய்தியென Channel - 4 கூறுகிறது.
நிக் பட்டனின் இச் செய்தி அறிக்கையின் படி இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவது தவிர, இறந்த உடல்கள் முகாம்களுள் வெளியான இடங்கள் நாட்கணக்கில் கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும் மேலும் கூறும் சனல் 4 செய்திகள் இம்முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கிறது. தன்னை அடையாளம் காட்டவிரும்பாத உதவி அமைப்பாளர் ஒருவர், தனது முகாமில் நான்கு இறந்த உடல்கள் மூன்று நான்கு நாட்களாக கவனிப்பரற்றுக் கிடந்ததாகக் குறிப்பிடுகிறார்.
பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாத தாய்மாரைப் காண்பதாகக் கூறும் இவர், ஒரு தாய் இரண்டு கரண்டி பாலுக்காக தன்னிடம் கெஞ்சி மன்றாடியதாகவும் குறிப்பிடுகிறார்.பல குழந்தைகள் தாய் தந்தையர் இல்லாமல் தவிக்கவிடப்பட்டுள்ளதாக முகாம் வாசி ஒருவர் குறிப்பிடுகிறார். இங்கு எமக்கு வாழ்க்கையில்லை இது ஒரு சிறைச்சாலை என மேலும் குறிப்பிடுகிறார்.உணவிற்காக நெரிசலில் சிக்குண்டு இறந்து போன இரு சிறார்களைப் பார்த்ததாக மேலும் சாட்சியமளிக்கும் இவர், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வந்த தமிழர்களை மிரட்டுவதே அரசின் நோக்கம் எனவும் குறிப்பிடுகிறார்.
ஒரு பெண் உதவிப் பணியாளர் சாட்சியமளிக்கையில் இளம் பெண்கள் இராணுவத்தால் பிரித்தெடுக்கப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறுகிறார். முகாம்களிலிருந்து தனிமைப்படுத்தப்படும் பெரும்பாலனவர்க மீண்டும் திரும்புவதில்லை எனக் குறிப்பிடுகின்றார்.பெண்கள் எல்லோர் முன்னிலையிலும் குளிக்கவேண்டிய நிலையிலிருப்பதாகவும் இது அவர்களின் மிகப் பெரும் பாதுகாப்புப் பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவிக்கும் இச்செய்தி நேற்று குளியற் பகுதியில் மூன்று பெண்களின் இறந்த உடல்கள் காணப்பட்டதாகவும் கூறுகிறது.
இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.
எழுத்துருவில் : இனியொரு...
பிரித்தானியாவின் Channel - 4 சேவையில் வவுனியா முகாம்கள் தொடர்பான செய்திகள்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், ஒளிக்காட்சிகள்
தொடர்புடைய இடுக்கைகள்:24ம் நாளாகத் தொடரும் திரு.பரமேஸ்வரனின் உண்ணாநோன்பு போராட்டம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், ஒளிக்காட்சிகள், செய்திகள், போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:பரமேஸ்வரனிடமிருந்து அழைப்பு - பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் திரண்டு வாருங்கள்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், ஒளிக்காட்சிகள், பேட்டி, போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவையில் இன்று இடம்பெற்ற இலங்கைக் கண்ணோட்டம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 1 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், ஒளிக்காட்சிகள்
தொடர்புடைய இடுக்கைகள்:அவுஸ்திரேலியாவில் தொடரும் போராட்டம்
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் உட்பட நால்வர் உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கவிருக்கின்றனர்.
மெல்பேர்ண் நகரில் உள்ள DANDENONG பிராந்தியம் PULTNEY STREET ல் DANDENONG PARK ல் ச.ரமணா, ச.சந்திரன், ஊடகவியலாளரான ப.தெய்வீகன் மற்றும் கோ.பானு ஆகியோர் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்குகின்றனர்.
இவர்கள் முன்வைத்துள்ள நான்கு கோரிக்கைகள் வருமாறு:-
- உடனடியாகவும், நிரந்தரமாகவும் நடைமுறைப்படுத்தக் கூடியதுமான போர் நிறுத்தம் மேற்கொள்ளக் கோரி சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.
- வன்னியில் உள்ள தமிழ் உறவுகளுக்கு அத்தியாவசியமான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி ஆகிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் வகையில் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.
- தமிழ் மக்கள் சுதந்திரமாக தங்கள் இருப்பிடங்களை தேர்ந்தெடுக்க அனுமதி கொடுக்கப்பட வேண்டும்.
- தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் உடனடியான பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும்.
இவர்களின் உண்ணாநிலை போராட்டத்துக்கு மெல்பேர்ண் வாழ் தமிழ் உறவுகள் ஆதரவு அளித்து இலட்சியத்தின் வெற்றிப்பாதைக்கு உறுதுணையாக வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
செய்திகள்: தமிழ்வின்
அவுஸ்திரேலியாவில் தொடரும் போராட்டம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், ஒளிக்காட்சிகள், செய்திகள், போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:கனடியத் தமிழரின் தொடர் போராட்டம்: தலைநகரின் வீதிகள் தமிழரால் முடக்கம்
சிறீலங்கா இனவெறி அரசின் கொடூர கொலைவெறியினைத் தடுத்து நிறுத்த அழுத்தம் கொடுக்கக்கோரி கனடியத் தலைநகரில் தமிழர்களால் தொடர் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கனடியத் தமிழர் சமூகம் மற்றும் கனடியத் தமிழ் மாணவர்களின் ‘கனடிய அரசாங்கம் செயலில் ஈடுபடும் வரையான தொடர் போராட்டம்’ அழைப்பையேற்று தமிழ் மக்கள் அனைவரும் கனடியத் தலைநகரான ஒட்டாவா நோக்கி அணிதிரண்டு கொண்டுள்ளார்கள். செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, விடிகாலை 6 மணியிலிருந்து பேருந்துகள், தங்கள் தனிப்பட்ட வாகனங்கள் மூலம் போராட்டத்திற்காகத் தலைநகர் நோக்கி மக்கள் சென்று கொண்டுள்ளார்கள்.
கனடிய பாராளுமனறத்தில் ஆரம்பித்த போராட்டம் சிறிது நேரத்தில் வீதியை நோக்கி நகர ஆரம்பித்தது. தலைநகரின் வீதியில் இறங்கி போக்குவரத்தினை மறித்த கனடியத் தமிழ் மக்கள் தலைநகரின் முக்கிய வீதிகளான Bank Street, O’Conner Drive ஆகிய வீதிகள் உட்பட்ட முக்கிய வீதிகளில் வீதி மறிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அலுவலகங்கள் முடிவடைந்த பின்னர் நகரே ஸ்தம்பித்திருந்தது.
தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடையினால் பல கிலோ மீற்றர் நீளத்திற்கு நகரின் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் நகரமுடியாது நிறுத்தப்பட்டிருந்தன.
வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெருமளவு காவற்றுறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயினும்,
- தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் படுகொலையை நிறுத்துவதற்கு சிறீலங்கா இனவெறி அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
- உடனடி யுத்த நிறுத்திற்கு சிறீலங்கா அரசைக் கொண்டுவரவேண்டும்.
அத்துடன், இவை நடைமுறைப்படுத்தப்படும் வரை தொடர்ச்சியான போராட்டமாக இப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.தலைநகரான ஒட்டாவாவில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை ரொறன்ரோ நகரில் உள்ள மாகாணப் பாரளுமன்றத்திற்கு முன்னாலும் தொடர் போராட்டத்தினை மக்கள் தொடர்ந்த வண்ணமுள்ளனர்.கடும் குளிரையும் பொருட்படுத்தாது கனடியத் தலைநகர் ஒட்டாவா வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கனடியத் தமிழ் சமூகமானது தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை வீதிகளை விட்டு அசையோம் எனும் உறுதியுடன் உள்ளார்கள்.பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று காலத்தின் கடமையை நிறைவேற்றும்படி ஒருங்கிணைப்பாளர்கள் கனடியத் தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கின்றார்கள். இப் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் மக்களிற்காக தொடர்ச்சியாக பேரூந்து வசதி ஏற்பாட்டாளர்களால் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை ரொறன்ரோ நகரின் பல பாகங்களில் இருந்தும் ஒட்டாவா செல்வதற்காக பேரூந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
செய்திகள்: பதிவு
கனடியத் தமிழரின் தொடர் போராட்டம்: தலைநகரின் வீதிகள் தமிழரால் முடக்கம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, ஒளிக்காட்சிகள், படம் இணைப்பு, போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:பிரித்தானியாவில் 3 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் போராட்டம்: காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி மக்கள் பேரெழுச்சி

இரவு இரவாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொடர்ந்தும் பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் ஊடான போக்குவரத்தை தமிழர்கள் வழிமறித்தனால் பிரித்தானியா நாடாளுமன்ற செயற்பாடுகள் முற்றாக செயலிழந்ததுடன், போக்குவரத்தும் பெரும் நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது.
- "சிறிலங்கா அரசே இனப்படுகொலையை நிறுத்து"
- "தாய்மார்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்வதனை நிறுத்து"
- "எமக்கு தேவை தமிழீழமே"
- "எமது தலைவர் பிரபாகரனே"
இலங்கை பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்களிடம் உறுதிமொழி வழங்கிய போதும் அதனை நிராகரித்த தமிழர்கள், தமக்கு உடனடி நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த தொடர் போராட்டத்தினால் பிரித்தானியாவின் முக்கிய தொடருந்து நிலையமான வெஸ்ட்மினிஸ்டர் நிலையத்தின் சேவைகள் நேற்று இரவுடன் முற்றாக நிறுத்தப்பட்டு ஒலிபெருக்கிகளில் மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களை அடக்குவதற்காக கலகம் அடக்கும் காவல்துறையினர் கொண்டு வரப்பட்ட போதும் ஆர்ப்பாட்டத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டதால் கலகம் அடக்கும் காவல்துறையினரால் அவர்களை அடக்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மேற்படி பகுதிக்குரிய காவல்துறை பேச்சாளர் தெரிவிக்கையில்,
தமிழர்களின் இந்த திடீர் போராட்டம் எமக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனினும் அமைதியான வழியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தினை தடுத்து நிறுத்து நோக்கம் எமக்கு இல்லை.அத்துடன், இந்த போராட்டத்துக்கு மேலதிகமாக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நாம் எந்தவித இடையூறும் விளைவிக்கவில்லை என்றார்.
எனினும், தமிழீழத் தேசியக் கொடியை கையில் ஏந்தியிருந்த நான்கு தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.மேலும் பலரை கைது செய்ய முற்பட்ட போது அங்கிருந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் எற்பட்டு இறுதியில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் கைவிட்டுள்ளனர். இதனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தமிழீழத் தேசியக் கொடியை குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கைகளில் ஏந்தியிருக்குமாறு கொடுத்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவியான ஜெயந்தி பரஞ்சோதி கருத்து தெரிவிக்கையில்,
பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அல்லது பிரதமர் கோடன் பிறவுண் இங்கு வந்து தாயகத்தில் இடம்பெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரைக்கும் இங்கிருந்து நாம் வெளியேறப் போவதும் இல்லை. எமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழிகள் தேவையில்லை என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சைமன்ட் கூச் தெரிவிக்கையில்,
தமிழர்களின் 25 வருட கால போராட்டத்துக்கு நான் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன். தற்போது தான் சரியான தருணம். பிரித்தானிய அரசாங்கம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழர்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதற்கு நானும் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன் என்றார்.
தேம்ஸ் நதிக்குள் குதித்து இருவர் தற்கொலை முயற்சி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் இருவர், நேற்று இரவு தேம்ஸ் நதிக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.எனினும், காவல்துறையினர் படகுகளில் சென்று அவர்களை உடனடியாக மீட்டதுடன், மேலும் பலர் தேம்ஸ் நதிக்குள் குதிக்கலாம் என அச்சத்தில் படகுகளுடன் முழு விழிப்பு நிலையில் உள்ளனர்.அத்துடன், கலகம் அடக்கும் காவல்துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய காவல்துறையினர் செயற்பட்டு வருகின்ற போதிலும் இன்று மாலை அப்பகுதியில் மேலதிகமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
- படம்: Reuters
- செய்திகள்: புதினம்
- காணொளி: MediaHouse
பிரித்தானியாவில் 3 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் போராட்டம்: காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி மக்கள் பேரெழுச்சி
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: ஒளிக்காட்சிகள், படம் இணைப்பு, போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரித்தானியாவின் Press TV இல் ஒளிபரப்பாகிய - கருத்து மன்றம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: ஒளிக்காட்சிகள், செய்திகள், பேட்டி
தொடர்புடைய இடுக்கைகள்:Hunting the Tigers - SBS - இலங்கையின் தற்போதைய நடப்புக்கள் தொடா்பான ஒளிஆவணத்தொகுப்பு
Hunting the Tigers - SBS இன் Dateline நிகழ்ச்சியில் ஒளிபரப்பான இலங்கையின் தற்போதைய நடப்புக்கள் தொடா்பான ஒளிஆவணத்தொகுப்பு. இறுதிவரை பாருங்கள். பாதுகப்பு அமைச்சா் கோத்தபாய சில உண்மைகளைக் கூறுகிறார். பார்த்துமுடித்த பின் SBS இன் தளத்திற்க்குச்சென்று பின்னுாட்டங்களை இடுவது மட்டுமன்றி George.Negus@sbs.com.au, amos.roberts@sbs.com.au எனும் முகவரிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துவிடுங்கள்.
Hunting the Tigers - SBS - இலங்கையின் தற்போதைய நடப்புக்கள் தொடா்பான ஒளிஆவணத்தொகுப்பு
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், ஒளிக்காட்சிகள், செய்திகள், படம் இணைப்பு, பேட்டி
தொடர்புடைய இடுக்கைகள்:பதுங்குகுழியில் வாழ்கை நடாத்தும் ஆசிரியரின் பேட்டி
வன்னியில் தினந்தினம் அரச படையினரால் நடாத்தப்படும் எறிகணைத் தாக்குதல்களை சமாளிப்பதற்க்காக தினமும் பதுங்குகுழியில் வாழ்க்கை நடாத்தும் ஆசிரியர் ஒருவரின் பேட்டி. இவர் தற்சமயம் மாத்தளன் பகுதியில் வசித்து வருகிறார்.
பதுங்குகுழியில் வாழ்கை நடாத்தும் ஆசிரியரின் பேட்டி
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: அவலம், ஒளிக்காட்சிகள்
தொடர்புடைய இடுக்கைகள்:CNN தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாயக மக்களின் அவலத்தின் சிறுதுளி
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: அவலம், ஒளிக்காட்சிகள்
தொடர்புடைய இடுக்கைகள்:காயமடைந்தோர் (400 நோயாளரில் 250நோயாளர் )கப்பல் மூலம் வெளியேறினர்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: அவலம், ஒளிக்காட்சிகள்
தொடர்புடைய இடுக்கைகள்:கொலைகார கோத்தபாயவின் அகங்காரப்பேட்டி
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: ஒளிக்காட்சிகள், செய்திகள், பேட்டி
தொடர்புடைய இடுக்கைகள்:பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மேற்கொண்ட கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் அமைப்பினரால் 04-02-2009 அன்று Parliament Square மற்றும் Sri Lankan High Commision முன்னால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது.நன்றி : வக்தா TV
பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மேற்கொண்ட கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: ஒளிக்காட்சிகள், செய்திகள், படம் இணைப்பு
தொடர்புடைய இடுக்கைகள்:ஈழம் தொடர்பான CNN செய்திகள்
இலங்கை தொடர்பான செய்திகளை தமிழக தொலைக்காட்சிகள் (மக்கள் தொலைக்காட்சி தவிர ) வெளியிடுகின்றனவோ இல்லையோ வெளிநாட்டு தொலைக்காட்சிகள் கடமைக்கேனும் வெளியிடுகின்றன.
ஒளிப்படம் : CNN
ஈழம் தொடர்பான CNN செய்திகள்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: ஒளிக்காட்சிகள், செய்திகள்
தொடர்புடைய இடுக்கைகள்:கோத்தபாய பேட்டி!
Sky News க்கு கோத்தபாய வழங்கிய பேட்டி! பிற்பாதியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையை இலக்கு வைத்து கடந்த மூன்று நாட்களாக சிறிலங்கா படையினர் கடுமையான பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் சிறிலங்கா தாக்குதல்களில் படுகாயமடையும் வன்னி மக்கள் சிகிச்சை பெற முடியாத சூழலை ஏற்படுத்தி, தனது இனப் படுகொலை போரை விரிவுபடுத்துகின்றது சிறிலங்கா. அதேசமயம், புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது நடத்தும் இந்த தொடர் தாக்குதலை, அது ஒரு இராணுவ இலக்கு என்று நியாயப்படுத்தி இருக்கின்றார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.
புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைக் கூடம் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் அது கடும் சேதத்திற்குள்ளானது.
புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு அருகில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பணிமனையினை இலக்கு வைத்து நேற்று முன்நாள் திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில், அனைத்துலுக செஞ்சிலுவைச் சங்கத்தினதும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினதும் பணியாளர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய கடும் பீரங்கித் தாக்குதலில் மருத்துவமனையின் பெண் நோயாளர் பகுதியில் பெருமளவிலான எறிகணைகள் வீழ்ந்து வெடித்து 9 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவமனை வளாகப் பகுதியில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியகங்களும் இருக்கின்றன என்பதும், மருத்துவமனை மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு வதிவிடப் பிரதிநிதி உறுதிப்படுத்தியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
இதேவேளை, பிரித்தானிய "ஸ்கை" ஒலிபரப்பு நிறுவனத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றில் - "புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஒரு நியாயபூர்வமான இராணுவ இலக்கு" என்றும், அதன் நடத்தப்படும் தாக்குதல்கள் சரியானதுதான் என்றும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கோத்தபாய ராஜபக்ச, பொதுமக்கள் அங்கு இல்லை இருப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள்தான் என்றார். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் புலிகள் தான் சிகிச்சை பெறுகின்றனர். அதனால் அங்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் பணியாற்ற வேண்டும் என்ற தேவை இல்லை" என்று தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச, படையினரின் தாக்குதல் இலக்கு ஒருபோதும் தவறியது கிடையாது எனவும் கூறினார்.
இதேவேளை, கடந்த வாரம் உடையார்கட்டு மருத்துவமனை தாக்கப்பட்டு தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பி.பி.சி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நானயக்கார, புதுக்குடியிருப்பில் மருத்துவமனை இயங்கும் போது மக்கள் ஏன் உடையார்கட்டு மருத்துவமனைக்கு போக வேண்டும்? எனக் கேட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆதார ஒளித்துண்டு : Sky News இலிருந்து
செய்தி : புதினம் இணையம்
கோத்தபாய பேட்டி!
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: ஒளிக்காட்சிகள், செய்திகள்
தொடர்புடைய இடுக்கைகள்:உறைபனி குளிரையும் புறந்தள்ளி கனடாவை உலுக்கியெடுத்த மனித சங்கிலிப் பேரணி: 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு- ஒளிக்காட்சிகள்
சிறிலங்கா அரசின் காட்டுமிராண்டித்தனத்தையும் தமிழ்மக்கள் மீதான திட்டமிட்ட படுகொலையையும் விவரிக்கும் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கனடாவின் பொருளாதார மையமான ரொறன்ரோ மத்திய நகர்ப் பகுதியில் உள்ள தெருக்களில் குவிந்திருந்து தமது இனத்திற்காக குரல் கொடுத்திருந்தனர்.
பூச்சியத்திற்குக் கீழே பத்து பாகை செல்சியஸ் என்ற குளிர்நிலையையும் அதற்குக் கீழான குளிர்காற்று நிலையையையும் கொண்டிருந்த நேற்றைய நாள் பிற்பகல் 12:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணி வரை 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
சுமார் ஆறு மணித்தியாலங்களாக நடைபெற்ற இந்நிகழ்வில் இடநெருக்கடி காரணமாகவும் குளிர் சீதோஸ்ண நிலை காரணமாகவும் மக்கள் ஏனையவர்களை வரவிட்டு திரும்பிச்சென்ற போதும் தொடர்ச்சியாக ஆறு மணித்தியாலங்களும் 45 ஆயிரம் பேர் அந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
பொருளாதார மையத்தை ஊடறுத்துச் செல்லும் சுமார் 15 கிலோ மீற்றர் சுற்றளவையுடைய பிரதான வீதிகளில் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து நின்றிருந்த மக்கள் போக்குவரத்தை செயலிழக்க வைக்கும் அளவுக்கு பெருமளவில் திரண்டிருந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
முக்கிய கனடிய செய்தி ஊடகங்கள் அனைத்துமே மேற்படி நிகழ்ச்சியை நேரடியாகவே ஒளிபரப்புச் செய்து கனடா முழுவதற்குமே இச்செய்திகளை உடனேயே எடுத்துச் சென்று எமது மக்களின் அவலத்தின் உண்மைப் பக்கத்தைக் கனடாவின் பல்லின சமூகத்திற்குப் புலப்படுத்தின.
மிகவும் அமைதியாகவும் யாருக்கும் பங்கம் ஏற்படாத வகையிலும் மனித சங்கிலியில் கலந்து கொண்டோர் நடந்து கொண்டதாக ஆங்கில ஊடகமொன்றிற்கு குறிப்பிட்ட ரொறன்ரோ நகர காவல்துறை அதிகாரி ஒருவர், தான் கடமையில் நின்ற புரண்ட் வீதி என்றழைக்கப்படும் ஒரு வீதியில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு நிவாரணம் சென்றடைய கனடிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைக்கான தளத்தை அமைப்பதில் காத்திரமாகப் பங்காற்ற வேண்டும் எனவும் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்று கனடிய ஊடகங்களை உலுக்கியெடுத்த இந்நிகழ்வு கனடாவில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் அடிவருடிகளிலும் செய்து வந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு சாவு மணி அடிப்பதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்திருந்தது.
அத்தோடு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிய உண்மைகளை கனடிய அரசாங்கத்தின் பார்வைக்கும் மக்களின் கவனத்திற்கும் கொண்டுவரும் நிகழ்வாகவும் அமைந்திருந்ததோடு மத்திய அரசின் கவனத்தையும் இந்நிகழ்வு எட்டிப்பிடித்தது.
கனடிய தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த முக்கிய அமைச்சர் ஒருவர், இவ்வளவு மக்கள் திரண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியதைத் தான் மதிப்பதாகவும் கனடிய தமிழர்களின் வலியைப் தான் புரிவதாகவும் தெரிவித்ததோடு இந்த விவகாரம் தொடர்பாக தானும் இதர அமைச்சரவைச் சகாக்களும் கலந்தாலோசித்து கூடிய விரைவில் ஒரு முடிவுக்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
உறைபனி குளிரையும் புறந்தள்ளி கனடாவை உலுக்கியெடுத்த மனித சங்கிலிப் பேரணி: 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு- ஒளிக்காட்சிகள்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: ஒளிக்காட்சிகள், செய்திகள்
தொடர்புடைய இடுக்கைகள்:லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம்
லண்டன் மில் பாங்க் (MILL BANK ) எனும் இடத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை (TEMPLE PLACE) நோக்கி சென்றது.
தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்தும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தைக் கண்டித்தும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.
"சிறிலங்கா அரசே தமிழின அழிப்பை நிறுத்து"
"எங்களுக்கு தமிழீழமே வேண்டும்"
"தமிழகத்தின் உணர்வுகளை சிறிலங்கா அரசே கொச்சைப்படுத்தாதே"
"உடனடியாக போரை நிறுத்த வேண்டும்"
"ஜி.எஸ்பி. சலுகை என்பது நீண்டகால அபிவிருத்திக்கே அன்றி தமிழின இன அழிப்பிற்கு அல்ல"
"இந்திய அரசே தமிழ் மக்களின் உணர்வை மதி"
"சிறிலங்கா அரசே தமிழ் இன அழிப்பை உடன் நிறுத்து"
"ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்து"
"பி.பி.சியே தமிழ் மக்கள் அழிவை கவனத்தில் கொள்"
"பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் கோயில்களிலும் குண்டு வீசுவதை நிறுத்து"
உள்ளிட்ட பல முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
அத்துடன், சிறிலங்கா இராணுவத்தின் படுகொலைகளை கண்டிக்கும் வகையில் படங்கள் அடங்கிய ஊர்திகளும்
வர்ணச் சித்திரங்களையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்ததுடன், தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் படம் தாங்கிய பதாகைகளையும், அமெரிக்க-பிரித்தானிய-ஜப்பானிய தலைவா்களின் வாய்கள் மௌனமாக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் பதாகைகளும், சிறிலங்கா வான்படையின் போர் வானூர்திகள் மக்களை பலியெடுப்பது போன்ற பதாகைகளையும், மகிந்த ராஜபக்ச - கோத்தபாய ராஜபக்ச - சரத் பொன்சேகா ஆகியோரை படுகொலையாளிகளாக சித்தரிக்கும் பதாகைகளையும், பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.
அத்துடன், நீதியின் திலகமாக விளங்கும் இந்தியாவின் மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த இந்திய தேசமே சிறிலங்காவின் தென்பகுதியில் இருந்து கொண்டு தமிழின அழிப்பை மேற்கொள்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டதுடன் அதனை பிரதிபலிக்கும் வகையில் காந்தியின் படத்தை தாங்கிய வாசக அட்டைகளையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.
இப்பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட மேலும் பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.
லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: ஒளிக்காட்சிகள், செய்திகள்
தொடர்புடைய இடுக்கைகள்:




