Showing posts with label மென்புத்தகம். Show all posts
Showing posts with label மென்புத்தகம். Show all posts

ஜனவரி தொடக்கம் மார்ச் வரையில் 3546 தமிழர்கள் படுகொலை படங்களுடன் விபரம் வெளியிடப்பட்டுள்ளது

வன்னியில் சிங்கள படையினரின் தமிழின படுகொலையில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையில் 3546 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 8370பேர் படுகாயமடைந்துள்ளதாக War Without Witness in Sri Lanka என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையினையே அந்த அமைப்பு வெளியிட்டுள்ளதுடன் கொல்லப்பட்டர்களின் விபரங்கள் சிலவற்றினை படங்களுடன் விபரங்களையும் இணைத்துவெளியிட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தினால் மக்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள் மீது அதன் படைகள் நடத்திய தாக்குதலிலேயே அதிகமான தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்புத்தகத்தை தரவிறக்க..




ஜனவரி தொடக்கம் மார்ச் வரையில் 3546 தமிழர்கள் படுகொலை படங்களுடன் விபரம் வெளியிடப்பட்டுள்ளதுSocialTwist Tell-a-Friend

"தமிழினப் படுகொலைகள்"- மென்புத்தகம்

இலங்கைத்தீவில் நடைபெற்று வரும் தமிழ் மக்களுக்கு எதிரான அரச வன்முறைகளுக்கு ஒரு நீண்ட சரித்திரம் உண்டு. இதில் மிக மோசமான ஒரு அம்சம் இலங்கை தமிழர்களின் பாரிய அளவிலான படுகொலைகள் ஆகும். இவைகளில் சில தமிழர்களின் ஆழ் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.இவை தொடர்பாக வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் 2005 காலப்பகுதியில் வெளியிட்ட தொகுப்புத்தான் "தமிழினப் படுகொலைகள்" இதில் பல்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற தமிழர்களது அவலங்களை புள்ளிவிபரங்களுடன் காணக்கூடியதாக இருக்கின்றது. அனைத்து தாயகத்தமிழர்களும் வாசிக்கவேண்டிய இத்தொகுப்பை நீங்கள் வாசித்தவுடன் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

* தமிழினப் படுகொலைகள் பகுதி ஒன்றினை தரவிறக்க. . . .
பகுதி ஒன்று* தமிழினப் படுகொலைகள் பகுதி இரண்டை தரவிறக்க. . . .பகுதி இரண்டுஇப்புத்தகத்தின் பகுதியை ஒரு மாற்றமுமில்லாமலும், வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தினது என்ற அங்கீகாரத்துடனும் மீளப்பதித்து பண இலாபமற்ற நோக்கத்துடன் விநியோகிக்க அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

நன்றி: வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்

"தமிழினப் படுகொலைகள்"- மென்புத்தகம்SocialTwist Tell-a-Friend