பிரித்தானியாவில் (05.03.09) தமிழர்கள் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம்

வன்னி மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் உடனடியாக கிடைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும்படி ஐக்கிய நாடுகள் சபைக்கும் பிரித்தானிய அரசுக்கும் தெரிவிப்பதற்கான மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்று லண்டனில் நடைபெற உள்ளது.இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நாளை வியாழக்கிழமை (05.03.09) பிற்பகல் 1:00 மணியில் இருந்து பிற்பகல் 6:00 மணி வரையும் இடம்பெறவுள்ளது.லண்டனில் மனிதச் சங்கிலி நடைபெறும் பகுதிகளாக:

லண்டன் நகரின் மத்தியில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அண்டர் கிறவுண்ட்டை மையப்படுத்தி, அதனை சுற்றியுள்ள
செறிங் குறஸ்,
கொல்போற்ன்,
ரொட்டணம் கோற்ட் றோட்,
பிக்கடிலி சேற்க்கஸ்,
கிறீன்பார்க்,
கைட்பார்க் கோற்னர்,
விக்டோறியா,
சென்- ஜேம்ஸ் பாற்க் ஆகிய அண்டர் கிறவுண்ட்கள் உள்ள வீதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விவரம் அறிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் (44) 7727899358 எனும் செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.

செய்திகள்: புதினம்

பிரித்தானியாவில் (05.03.09) தமிழர்கள் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம்SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்