தமிழ் தேசிய ஊடகங்களை குறிவைத்து அழிக்கும் கூட்டுச்சதி-தமிழ்க்கதிர்,சங்கதி தளங்கள் செயலிழந்தன
தமிழ்த் தேசிய ஊடகங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் கூட்டுச் சதி நடவடிக்கையில் தற்போது சங்கதி, தமிழ்க்கதிர் இணையத்தள ஊடகங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.
தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பு நடவடிக்கையை பல்வேறு ஆதாரங்களுடன் உடனுக்குடன் வெளியிட்டுவந்த இந்த ஊடகங்கள் சிறீலங்கா - இந்தியாவின் கூட்டுச் சதியில் சிதைக்கப்பட்டுள்ளதை நாங்கள் வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.
முன்னர் பதிவு இணையத்தளமும் இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் சிக்குண்டு மீண்டிருந்தது. அதேபோல், தமிழர் தாயகத்தின் இனப்படுகொலையை மறைப்பதற்கு இந்த சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடித்து, மக்கள் அவலத்தையும், இனப்படுகொலைகளின் ஆதாரங்களையும் மீண்டும் சங்கதி, தமிழ்க்கதிர் ஊடகங்கள் விரைவில் வாசகர்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.
அத்துடன், எமது இணையத்தள தரவுகளின் அடிப்படையில் உலகில் சங்கதியும், தமிழ்க்கதிரும் பார்வையிடுவோர் எண்ணிக்கையில் இலங்கை முதலிடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
செய்திகள்: தமிழ்வின்
பி.கு : எமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களில் படி இத்தளங்களுக்கு அதிகளவு வேண்டுகோள்களை அனுப்பி அவற்றை கையாள முடியாததாலேயே தளங்கள் செயல் இழக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. Dos Attack எனப்படும் முறையில் இது செயல் படுத்தப்படும். அதாவது குறிப்பிட்ட சில மென்பொருட்கள் மூலம் ஓர் வேண்டுகோளை 20,000 வேண்டுகோளாகவோ அல்லது அதற்க்கு மெற்பட்டதாகவோ ஓர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தளத்திற்க்கு அனுப்பும் போது போதிய தாங்குசக்தி இல்லாமையால் செயலிழந்து போகின்றது. இதனால் தளத்தின் தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படமாட்டாது. தளம் தற்காலிகமாக செயல் இழக்கும்.
எனவே தமிழ்க்கதிர்,சங்கதி தளங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்
2 பின்னூட்டங்கள்:
http://www.lankaoil.com போன்று ஏதாவது ஒரு புறக்சியினூடக, இத்தளத்தை பார்வையிட முடிகிறது. முயன்று பாருங்கள்.
கவின்
இப்போது தளங்கள் பழைய நிலைக்கு வந்து விட்டன !
Post a Comment
வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.
நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்