பிரித்தானியாவில் 9 வது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சதி !

பிரித்தானியா பாராளுமன்றம் முன் 9 வது நாளாகத் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.மக்களின் எழுச்சிப் போராட்டத்தை எப்படியாவது முடக்க பிரித்தானியாக் காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.எனினும் அது கைகூடாத நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து வருகின்றனர்.

எனினும் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சில தீய சக்திகள் சதி வேலைகளிலும் இறங்கியுள்ளன.வழமையாக இரவு பகல் பாராது போராட்டங்களில் கலந்துகொள்ளும் தாயக மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படுவது வழக்கம். இன்று மாலையும் அது போலவே சிலர் சிறுவர்களிடையே மயக்கமருந்து கலக்கப்பட்ட இனிப்புகளை வழங்கியிருக்கின்றனர் இதனால் 2 சிறுவர்கள் உடனடியாக மயக்கமாகியுள்ளனர். இதனையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. உடனடியாக விரைந்து செயற்பட்ட மாணவர்களும் பிரித்தானிய காவற்துறையினரும் இனிப்புக்களை வழங்கிய இருவரை பிடித்ததோடு ஏனையோரையும் தேடி வருகின்றனர்.

இவ்வாறான கோழைத்தனமான செயற்பாடுகள் இனியும் நடைபெறும் என்பதால் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு காவற்துறையினரும் மாணவர்களும் தாயக உறவுகளிடம் கேட்டுக்கொள்கின்றனர்

இது தொடர்பான அறிக்கை ஒலி வடிவில்

பிரித்தானியாவில் 9 வது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சதி !SocialTwist Tell-a-Friend

2 பின்னூட்டங்கள்:

Unknown said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு - http://tamil10.com/submit/

Anonymous said...

Do not buy anything from strangers. Anything you want to drink or eat take it with you from your house.
PLEASE BE CAREFUL.

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்