வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை, வான் தாக்குதல்: 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 தமிழர்கள் படுகொலை

வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, வான் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, ஆர்பிஜி உந்துகணை, தொலைதூர துப்பாக்கிச் சூட்டு மற்றும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் அடங்குவர்.

  1. இராசமாணிக்கம் ஜோதிகா (8 மாத குழந்தை)
  2. சிவசக்தி தேவதாசன் (வயது 02)
  3. பாஸ்கரன் லோகேஸ்வரன் (வயது 2 வருடம் 6 மாதம்)
  4. சேதுகாவலன் மயூரதன் (வயது 05)
  5. தர்மேந்திரன் (வயது 06)
  6. தர்மேந்திரன் கார்த்திகா (வயது 06)
  7. கந்தசாமி தனுசன் (வயது 08)
  8. லோகநாதன் லோஜிதா (வயது 09)
  9. டினோசிலா (வயது 09)
  10. லோகநாதன் திசா (வயது 09)
  11. முருகானந்தம் தர்மினி (வயது 12)
  12. பாக்கியராஜா மதுசனா (வயது 13)
  13. முத்துலிங்கம் கம்சனா (வயது 14)
  14. தர்மராஜ் கிருத்திகா (வயது 14)
  15. சோதி (வயது 48)
  16. சிவராசா (வயது 35)
  17. பஞ்சலிங்கம் தனஞ்சிநாத் (வயது 28)
  18. ம.சந்திரன் (வயது 69)
  19. சிவகுருநாதன் புனிதலட்சுமி (வயது 57)
  20. இ.சுபாசினி (வயது 30)
  21. தில்லைநாதன் சுமதி (வயது 38)
  22. லோகநாதன் ஹேமா (வயது 32)
  23. சிவசுப்பிரமணியம் பாஸ்கரன் (வயது 34)
  24. செ.சுடரேந்தி (வயது 33)
  25. தர்மலிங்கம் வீரசிங்கம் (வயது 54)
  26. இந்திரராஜா (வயது 42)
  27. கேசவன் புனிதமலர் (வயது 32)
  28. செல்வரட்னம் செல்வமணி (வயது 38)
  29. கந்தையா கருணாகரன் (வயது 29)
  30. சிவபாதராஜா பார்வதி (வயது 42)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டில் நாள்தோறும் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.உணவுப் பொருட்களுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களே சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வருகின்றனர். அம்பலவன்பொக்கணை பகுதியில் நேற்று வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த 52 வயதுடைய இரத்தினம் சண்முகலிங்கம் என்பவர் சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளையில் அம்பலவன்பொக்கணை தொடக்க சுகாதார நிலையத்தில் இயங்கும் செம்மலை மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்திருந்த 22 வயதுடைய யோகேஸ்வரன் பரிமளா மற்றும் 18 வயதுடைய அ.ராகுலன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது இவ்வாறிருக்க, சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக சிறுவர்களும் முதியவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உளவளத்துணையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.சிறார்கள் மத்தியில் பழக்கங்களில் மாற்றம், முதியவர்கள் மத்தியில் நோய்த்தாக்கம் அதிகரித்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.அதேவேளையில் சிறார்கள் மத்தியில் ஊட்டச்சத்து பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சிறிலங்கா படையினர் அடிக்கடி கப்பல் மீது தாக்குதல் நடத்துவதனனால் உணவுப்பொருட்களை ஏற்றுவதிலும் நோயாளர்களை கப்பலில் ஏற்றுவதிலும் பெரும் இடர்கள் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் ம.குணசிங்கராசா தெரிவித்துள்ளார்.

செய்திகள்: புதினம்

வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை, வான் தாக்குதல்: 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 தமிழர்கள் படுகொலைSocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்